Saturday, November 7, 2009

காயகல்பம் பற்றிய சில குறிப்புகள்

காயகல்பம் என்றால் என்ன?

காயமாகிய உடலை கல்பம் செய்வது - சித்தம் செய்வது.
மூப்பு, நோய், மெலிதல், பெருத்தல், பசி, தாகம், களைப்பு, அதிக தூக்கம்
ஆகியவை இல்லாமல் இருத்தல்; ஐம்புலன்கள் கூர்மை மாறாமல் இருத்தல்; மலம்,
சிறுநீர், வியர்வை அதிகம் வெளியிடாமல் இருத்தல், குளிக்கவில்லையென்றாலும்
துர்நாற்றமில்லாமல் இருத்தல் போன்ற தன்மைகளைப் பெற்றிருத்தல் காயகல்பத்தில் அடங்கும்.
உடலைக் கல்பம் செய்துவிடுவதால் அதில் சிரமமில்லாமல் உயிர் இருப்பதற்கு வசதி ஏற்படுவிடுகிறது.
உணவோ நீரோ அதிகம் தேவைப்படமாட்டாது.
நீண்டகாலத்துக்கு உயிர் உடலில் தங்கியிருப்பதற்கு முடியும் நிலையில்
உடல் இருக்கும்.
ஆனால் அளவில்லாத காலத்துக்கு உயிரை வைத்துக்கொள்ள முடியுமா?
ஆயுட் காலம் என்பது இருக்கிறது அல்லவா.
சமாதி நிலையில் இருப்பது, நிர்விகல்ப சமாதி, உயிரை/
ஆவியுடலை வெளியில் உலவச் செய்வது, கூடுவிட்டுக் கூடு பாய்தல்
போன்றவையெல்லாம் இதன் தொடர்பாக உள்ள சமாச்சாரங்கள் தாம்.
காயக்ல்பம் செய்துகொண்டாலும்கூட உயிரை அந்த
உடலில் நீண்ட காலம் தங்க வைப்பதற்கு விசேஷமான
பிராணாயமம் போன்ற முறைகள் இருக்கின்றன.
எத்தனை சுழி மூச்சு ஒரு மனிதனுக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது
என்பதற்கு வரையறை உண்டு.
அந்த சுழியைச் சேமித்து வைத்துக்கொள்ளும் முறைகள் உண்டு. அவ்வாறு
சேமிப்பில் போட்டுக்கொள்ளும்போது அந்த
சுழிகளின் கணக்குக்கு ஏற்ப ஆயுளும் நீடிக்கும் அல்லவா?
நாளொன்றுக்கு சராசரி மனிதன் 25920 முறை மூச்சு
விடுகிறான். அவனுடைய நாடி 103,680 தடவை அடிக்கிறது.
இந்த வேகத்தைக் குறைத்துக் கொள்ளமுடிந்தால்....?
யோகியருக்கும் சித்தர்களுக்கும் இது முடியும்.

மிக மிக மிக எளிமைப் படுத்திச் சொல்லியிருக்கிறேன். மேலும் சொல்கிறேன்.
காயகல்பத்திற்குப் பல முறைகளும் பயிற்சிகளும் இருக்கின்றன.
தோஷமற்ற உணவு, குறைவான உணவு, ஒரு நேர உணவு, குடலைக் கழுவுதல், குறைவான
தூக்கம், பிராணாயாமம், தியானம், இயமம், நியமம், ஆசனம் போன்ற பல சங்கதிகள்
சம்பந்தப் பட்டிருக்கும். சில மருந்துகளும் உட்கொள்வார்கள்.
தங்க பஸ்பம்கூட காயகல்பம் சம்பந்தப்பட்டதுதான்.

அமூரிதாரணை என்றொரு முறை உண்டு. காலையில்
எழுந்தவுடன் சிறிது சிறுநீரைக் கழியவிட்டு, அதன் பின்னர் ஓர்
உள்ளங்கையளவு - நூறு மிளகு அளவுக்குச் சிறுநீரைப் பிடித்து,
வெறும் வயிற்றில் குடிப்பதுதான் அமூரிதாரணை.

காயகல்ப மூலிகை மருந்துகளில் ஒரு மருந்தைப் பற்றி
டாக்டர் சர்மா ஒருமுறை சொன்னார்.
பல ஆண்டுகள் வயதாகிய முற்றிய நெல்லிமரத்தை
வெட்டிவிடுவார்கள். அதன் அடிப்பாகம் வெளியில் நீட்டிக்
கொண்டிருக்கும். அதைக் குடைந்து ஒரு குடம்பை உருவாக்கிக் கொள்வார்கள்.
அதற்குள் தொண்ணூற்றாறு வகை மூலிகைகள், மருந்துப்
பொருட்களைச் சித்தப்படுத்தி, சுத்தப்படுத்தி சேர்மானம் செய்து
வைப்பார்கள். அந்த தொண்ணூற்றாறு பொருட்களில் நெல்லிக்
கனியும் இருக்கும். அதற்குமேல் வேடுகட்டி களிமண்¨ணைப்
பூசிவிடுவார்கள். அதன்பின்னர் அதற்கு நெருப்பு மூட்டி மெதுவாகக் கனன்று
கொண்டிருக்குமாறு செய்வார்கள். நாட்கணக்கில்
நெல்லிமரத்தின் அடிப்பாகம் எரிந்து கனன்று கொண்டிருக்கும்.
குறிப்பிட்ட காலம் கனன்றுகொண்டிருந்த பிறகு மேலேயுள்ள களிமண்ணால்
கட்டப்பட்டிருந்த வேடை உடைத்து நீக்குவார்கள்.
அதற்குள் இருக்கக்கூடிய மருந்தை எடுத்து நன்கு சுத்தப்படுத்தி
பயன்படுத்துவார்கள்.

இது ஒரு காயகல்ப மருந்து.

I got this information from a yahoo group.

No comments: