Thursday, February 7, 2013

சிந்தனைக்கு சில

கடவுளின் துதிபாடல்கள் என்று பல நல்ல கருத்துக்களை, விடயங்களை விட்டுவிடுகிறோம்......

மேற்கோளிடப்பட்ட ஒர் எடுத்துக்காட்டு இங்கே.......

எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு செய்யுள்
==============================

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை
பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண் ஆசையை மறக்க வேண்டும் உனை
மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின் கருணைநிதி வேண்டும் நோயற்ற
வாழ்வில் நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே
தண் முகத்துய்ய மணி உண் முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே


கடவுளை துதிக்க மறுப்பவரும் ஏற்க வேண்டிய உண்மை நிலை
=================================================

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை
பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண் ஆசையை மறக்க வேண்டும் உனை
மறவாதிருக்க வேண்டும்

மதி வேண்டும் நின் கருணைநிதி வேண்டும் நோயற்ற
வாழ்வில் நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே
தண் முகத்துய்ய மணி உண் முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

சிந்திக்க வேண்டிய வள்ளுவன் வாக்கு
==============================

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்பொருள் காண்ப தறிவு.


ஆறுபடைவீட்டு தத்துவம்


முருகப்பெருமானின் ஆறுபடை வீடு
௧. திருபரம்குன்றம் : மூலாதாரம்
௨. திருசெந்தூர் : சுவாதிஷ்டானம்
௩. திருவாவினன்குடி - பழனி :மணிபூரகம்
௪. திருவேரகம் (சுவாமிமலை) : அநாகதம்
௫. திருத்தணி-குன்றுதோறாடல் [குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் ரூபமாக, அரூபமாக இருக்கிறான்] : விசுக்தி
௭. பழமுதிர்சோலை : ஆக்ஞை

மூலாதாரம்- திருப்பரங்குன்றம்; தெய்வானையை மணந்த தலம்.
சுவாதிஷ்டானம்- திருச்செந்தூர்; சிந்தனை அலைமோதி துன்பம் துடைக்கும் தலம்.
மணிபூரகம்- திருவாவினன்குடி; ஞானதண்டாயுதபாணி உள்ள யோகத்தலம்.
அநாகதம்- திருவேரகம் என்ற சுவாமிமலை; தந்தைக்கு உபதேசித்த தலம்.
விசுக்தி- திருத்தணி; குறிஞ்சியில் விளையாடும் தலம்.
ஆக்ஞை- பழமுதிர்சோலை; ஞானப்பழம் உதிரும் சோலையாகிய தலம்.